குறிப்பாக கடந்த 3 மாதங்களாக கிழக்குமாகாணசபை கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. எனினும் உத்தியோகபூர்வ அறிவிப்பாக அவை இருக்கவில்லை. எனினும் கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள் இன்றிரவு கலைக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வறட்சி மற்றும் ரமழான் நோன்பு காலத்திற்கு மத்தியில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளை கலைப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றிரவு கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது இம்மாகாண சபைகளை கலைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இம்மாகாண சபைகளை கலைத்து செப்டெம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது ஆளும் கட்சி முக்கியஸ்தர்களின் கருத்தாக இருந்தது.
நோன்பு, வரட்சிக்கு மத்தியிலும் தேர்தல் என்றால் ஒரு சூடு பிடித்தே தீரும் என்பது கடந்தகால உண்மையே!
![Eastern_Province_Flag_(SRI_LANKA)[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/eastern_province_flag_sri_lanka1.png?w=150&h=93)
Leave a comment