மூக்கை வாய்க்குள் திணிக்க முயன்ற பாடசாலை மாணவர்கள்

தமிழ்ப் பத்திரிகையொன்றின் செய்தியால் வந்த வினை

இரண்டு தினங்களுக்கு முன்னர் பத்திரிகையொன்றில் முன்பக்கத்தில் கிட்டத்தட்ட அரைப்பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. மூக்கை வாய்க்குள் திணித்து தனது முகத்தை அவலட்சணமாக்கியது மட்டுமல்லாது தனது இந்த முயற்சியை எவராவது முறியடிப்பின் பணப்பரிசையும் வழங்குவதாக வெளிநாட்டிலுள்ள வேலையற்ற ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்குரிய அவலட்சனமான வர்ணப் புகைப்படங்களும் பிரசுரமாகியிருந்தன. எந்த ஊடகங்களுமே கண்டு கொள்ளாத இதை ஏதோ உலக சாதனையாக உள்ளூர் தமிழ் பத்திரிகையொன்று முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.

அன்றைய தினம் இதைப் பார்த்த பாடசாலை மாணவர்கள் பலரும் இந்த மடத்தனமான விபரீத முயற்சியில் இறங்கியதன் விளைவாகப் பல தமிழ்ப் பாடசாலைகளின் வகுப்பறைகளில் கலகம் ஏற்பட்டமையைக் காண முடிந்தது. சில தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரியர்களால் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாதிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இரு மாண வர்கள் வாயை கைகளால் பிளக்க குறிப்பிட்ட மாணவன் தனது மூக்கை பிளந்த தனது வாய்க்குள் திணிக்க முயற்சித்த மையால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலைமையும் பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட பத்திரிகையில் வெளியாகிய முன்பக்க செய்தி தொலைக்காட்சியிலும் விலாவரி யாக வாசிக்கப்பட்டதால் விபரீதம் பன்மடங்காகியதாக தெரி விக்கப்படுகிறது. நல்ல விடயங்கள் பல இருக்க ஏன் இப்படி எனப் பெற்றோர் பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அப்பத்திரிகைக்குப் பொறுப்பானவர் வேண்டாம் வேண்டாமெனக் கூறியும் கீழிருந்தவர்கள் கேட்கவில்லையாம்.

தினகரன்

Published by

Leave a comment