பிரித்தானியாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் யார் என்பதை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் போதகர் இம்மானுவேல், சுரேன் சுரேந்திரன், மயன் கந்தையா ஆகிய விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே இந்தப் போராட்டத்தை முன்நின்று ஒழுங்கு செய்துள்ளனர் எனப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிலைப்படுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.
எதிர்காலத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்காக எனத் தெரிவித்து ஒரு நபருக்கு 50 பிரிட்டன் பவுண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ லண்டனிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் தங்குவதற்கு முன்னரே அந்த ஹோட்டலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த லண்டன் பொலிஸாரின் அனுமதி பெறப்பட்டிருந்ததாகவும் திவயின பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![article_105142821651712c_1338988501_9j-4aaqsk[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/article_105142821651712c_1338988501_9j-4aaqsk1.jpg?w=300&h=168)
Leave a comment