-MMS
1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டுமென்ற பிரேரணையொன்று கிழக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற அரசாங்கம், அரச அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள், மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட அனைவரும் நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட இந்த பிரரேணை, அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சென்றமாதம் பிரதி அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் இவ்விடயமாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி இருந்தார். இதற்கிடையில் மீளக் குடியேற்றத்திற்கு மன்னார் ஆயரரும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment