சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இதன் ஒரு கட்டமாக கல்லடி வேலூர் சமுர்த்தி வங்கியும் சமுர்த்தி ஒன்றியமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதி நாடம் கல்லடி மண்கூண்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள், சமுர்த்தி ஊழியர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது விழிப்புணர்வு கொடியும் விநியோகிக்கப்பட்டது.
-Adaderana
Leave a comment