இன்று இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் அனைவரிடத்திலும் பிரபல்யமாகி நன்மதிப்பையும் பெற்றுவரும் KKY குறுந்தகவல் சேவை (KKY SMS), தற்பொழுது தங்களது சேவையின் ஒரு வருட நிறைவைப் பெற்றிருக்கின்றது.
சமூக நல நோக்கில் ஒரு வருடமாக நடப்பு செய்திகள், மார்க்க விடயங்கள், வினா-விடைப் போட்டிகள், விளையாட்டுச் செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்கள், போன்ற பல சேவைகளை உடனுக்குடன் வழங்கி, காத்தான்குடி வாழ் மக்களும் வெளியூர் மக்களும் அறிந்து கொள்ள உதவி வருவதை மறக்க முடியாது.
KKY SMS இன் சமூகப் பணி மென்மேலும் வளர்ச்சியடைய பிரார்த்தித்து எங்களது வாழ்த்துக்களையும் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
நன்றி.
இயக்குனர்,
உங்கள் காத்தான்குடி
Leave a comment