-MMS
நாட்டின் சில பாகங்களில் நேற்று இரவு 9.52 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நுவரெலியா, ஹட்டன், இரத்தினபுரி, பதுளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களிலேயே நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் தொடர்மழையும் வெள்ளமும் ஏற்பட்டிருக்கும் இந்நிலையில் மக்கள் மீண்டும் அச்சமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment