சத்துருக்கொண்டானில் விபத்து இரு ஏறாவூர் சகோதரர்கள் ஸ்தலத்திலேயே பலி!

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் உள்ள சத்துருக்கொண்டான் எனும் இடத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

ஏறாவூர் சத்தாம் ஹுசைன் கிராம வாசிகளான அப்துல் சமத் வயது 24 மற்றும் அவரது சகோதரர் நாகூர் முஹம்மத் சாலி வயது 34 ஆகியோரே பலியானவர்களாவர்.

மேற்படி இரு சகோதர்களும் மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொணடிருக்கும் போது எதிரே வந்த காரொன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்தது.

மேற்படி இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment