யாழ். பல்கலைக்கழகத்தின் மாபெரும் மருத்துவக் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்று இன்று (21) திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்தி அரசரெட்ணத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கள் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஏனைய மாவட்ட மாணவர்கள் எனப் பலரும் பார்வையிடலாம் என யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் கல்வி கற்றும் மருத்துவ மாணவர்களினால் இந்தக் கண்காட்சி செயல்முறை விளக்கங்களுடன் நடைபெற்று வருகின்றது.

காணக்கிடைக்காத அரிய பொக்கிசங்கள் மருத்துவ நுனுக்கங்கள் சுகவாழ்வுக்கான அம்சங்கள் அடங்கியவை இந்த மருத்துவக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

இறந்த உடல்கள் நேரடி சத்திதிர சிகிச்சை என்பன இங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

Published by

Leave a comment