இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பின்னணி அம்பலமாகியுள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் உலை உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதியளித்தமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அணு உலை உருவாக்கத்திற்கு ஆதரவளித்தமையினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் வாக்களித்துள்ளது.
பி.பி.சீ இந்திய சேவையின் ஊடகவியாளர் நராண் பூசன் இதனை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கைக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே அணுஉலை தயாரிப்பிற்கு ஆதரவளிக்க முடியும் என ஜெயலலிதா அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Tamilwin
Leave a comment