கொழும்பிலும் நாட்டின் பல பாகங்களிலும் கண்டண ஆர்ப்பாட்டம்! தம்புள்ளை பள்ளிவாயலில் மீண்டும் ஜும்ஆ தொழுகை:

காத்தான்குடியில் கண்டண ஆர்ப்பாட்டமில்லை! அமைதிப்பிரார்த்தனை!

காத்தான்குடியில் ஆர்ப்பாட் உணர்வுகளோ கண்டணங்களோ மக்கள் மத்தியில் இன்று காணப்படவில்லை. துஆப்பிரார்த்தணை மாத்திரம் நடைபெற்றது. இருந்தும் அதிகமான இளைஞர்களும் பொதுமக்களும் ஊர்த்தலைமை, ஊர் அரசியல் தலைவர்கள் விடயத்தில் அதிருப்தியையும் விசனத்தையும் தெரிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

(படங்கள் இணைப்பு)

கடந்த வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்ட தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில்இன்று மீண்டும் ஜூம்ஆ தொழுகை எவ்வித தடங்களும் இன்றி நடைபெற்றுள்ளது. இந்த ஜூம்ஆ தொழுகைக்கு தம்புள்ளையில் இருக்கும் முஸ்லிம் வர்த்தகர்களும் அயல் ஊரில் உள்ள சில முஸ்லிம் சகோதரர்களும் கலந்து கொண்டிருந்தனர். அரசாங்க பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று மாலை குறித்த பள்ளிவாயல் விடயமாக உயர்மட்ட கூட்டமொன்று கொழும்பில் நடைபெற உள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

காத்தான்குடியில் ஆர்ப்பாட் உணர்வுகளோ கண்டணங்களோ மக்கள் மத்தியில் இன்று காணப்படவில்லை. துஆப்பிரார்த்தணை மாத்திரம் நடைபெற்றது. இருந்தும் அதிகமான இளைஞர்களும் பொதுமக்களும் ஊர்த்தலைமை, ஊர் அரசியல் தலைவர்கள் விடயத்தில் அதிருப்தியையும் விசனத்தையும் தெரிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 இதற்கிடையில் கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாயலில் பெருந்திரளான முஸ்லிம்கள் இன்றைய ஜூம்ஆவின் பின்னர் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர். இதனால் என்றைக்குமில்லாத வாகண நெரிசல் இப்பகுதியில் காணப்பட்டிருந்தது. புத்தளம் , யாழப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும்  கண்டண ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment