ஸக்காத் உதவி வழங்கும் நிகழ்வு

-Tamilmirror

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸக்காத் நிதியத்தினால் ஸக்காத் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கூட்டு ஸக்காத் நிதியத்தின் தலைவர் மௌலவி ஏ.எம்.அலியார் றியாதி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.சுபைர் உட்பட அதன் முக்கயஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தொழிலுக்காக 70 பேருக்கும், கடன் நிவாரண உதவியாக 70 பேருக்கும், வாழ்வாதார உதவியாக 50 பேருக்கும் ஸக்காத் உதவிகள் வழங்கப்பட்டன.

Published by

Leave a comment