ஆறுமுகன் தொண்டமான் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்தன.
எனினும் கால்நடை அபிவிருத்தி மற்றும்  கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இந்த ராஜினாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை.

-Tamilmirror

Published by

Leave a comment