நஸீரின் பதவியேற்பு அசிங்கமானது !
உயர்பீடம் 22 இல் கூடுகின்றது!!
- முகா தலைவர் அறிக்கை –

முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது. கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் வெள்ளிகிழமை (22) உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ரவூப் ஹக்கீம் அறிவித்திருப்பது நகைப்பிற்குரியது. கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடரந்து மு.கா உம் அஇமகா உம் மொட்டு அணியுடன் கைகோர்த்து வருகின்ற நிலையில் 20 புகழ் நசீர் ஹாபிஸ் இற்கு கிடைத்துருக்கும் பிரதி அமைச்சர் பதவிக்குப் பின்னால் வியாபார மு.கா இன் முழு ஆதரவும் மறைந்திருக்கிறது.