பாடசாலைகளில் அரசியல்வாதிகளுக்காக இதை நாம் உண்மையில் செய்ய வேண்டுமா?

By Dr. Rayees Mustafa (UK)

சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு பாடசாலை நிகழ்வொன்றில் இருபுறமும் நின்றிருந்த மாணவிகள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்ததை நான் கண்டேன்.

பாடசாலைகளில் அரசியல்வாதிகளுக்காக இதை நாம் உண்மையில் செய்ய வேண்டுமா?

அரசியல்வாதிகள் மக்கள் சேவகர்கள், எஜமானர்கள் அல்ல. நாங்கள் அவர்களுக்கு வாக்களித்ததால் அவர்கள் அனைவருக்கும் எம்.பி பதவி கிடைத்தது.

நமது வாக்குகள் இல்லாவிட்டால் சாதாரன நபர்களே . நமது வாக்குகள்தான் அவர்களை இந்த பதவிக்கு உயர்த்தியது. எனவே, அவர்கள் மக்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்,

எங்கள் குழந்தைகள் பாடசாலைக்கு வருவது தரமான கல்வியைப் பெறவே தவிர, அரசியல்வாதியைப் புகழ்ந்து பாடுவதற்காக அல்ல.

பாடசாலைகளில் குழந்தைகளின் தரமான நேரத்தைச் சுரண்டுவதும், அறிவைத் தேடும் அவர்களின் விலைமதிப்பற்ற மணி நேரங்களை வீணடிப்பதும் ஒரு வகையான குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் பள்ளியில் கல்விக்கான அவர்களின் உரிமையைப் புறக்கணிப்பதாகும்.

நமது சமூகம் அரசியல்வாதிகளைப் புகழ்வதை விட்டு விட்டு, அவர்கள் வாக்குறுதியளித்ததை நிறை வேற்றுவதற்குத் தங்கள் வேலையைத் திறமையாகச் செய்ய அவர்களை நிர்பந்திக்க வேண்டும்

ஒரு குழந்தை மருத்துவர் என்ற முறையில், அரசியல்வாதிகளின் புகழ் பாடுவதற்காக குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் (child abuse) பார்ப்பது மிகவும் வெறுப்பாக இருக்கிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s