மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகர் பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் என 1214 பேருக்கு மேற்கொண்ட PCR மற்றும் அன்டிஜன் Rapid Antigen பரிசோதனையில் 63 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
Dr.நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இதில் காத்தான்குடியைச் சேர்ந்த 24 பேருக்கும் ,
ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த 02 உட்பட
26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 10 பேர் பரிசோதனைக்கு செல்லவில்லை .
அதேவேளை இதில் தொடர்புடையவர்களின் வர்த்தக நிலையங்களான 17 கடைகளை சுகாதார அதிகாரிகள் மூடியுள்ளனர்.
இதேவேளை,
காத்தான்குடியில் 665 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது .
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தொற்றாளர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்று திரும்பியவர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.