முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்ய மாலத்தீவிடம் உதவி கேட்கவில்லை

கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைத்தீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

கொழும்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கோவிட்-19 தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அலுவல்பூர்வ கோரிக்கை இதுவரை மாலைத்தீவிடம் (மாலத்தீவு) முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

RAMESH PATHIRANA

இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மாலைத்தீவிடம் இலங்கை உதவியை கோரியதாக மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் தனது ட்விட்டர் தளத்தில் ஊடாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கையில் கோவிட் தொற்று தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வது தொடர்பில் மாலைத்தீவு கவனம் செலுத்தியுள்ளமை, இந்த ட்விட்டர் தள செய்தியின் ஊடாக வெளியாகியிருந்தது. 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி இப்ரைஹிம் சோலி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s