இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும்
குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும்
தண்டனை சட்டத்திற்கு பிரதமர் இம்ரான்கான்
ஒப்புதல் அளித்துள்ளார்.

பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவான
மற்றும் கடுமையான தண்டனை வழங்க
கொள்கை அளவில் இம்ரான் ஒப்புதல்
அளித்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள்
வெளியிட்டுள்ள செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக
இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி
செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில்
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம்
இயற்றப்படும் என தெரிவித்துள்ளமையும்
குறிப்பிடதக்கது.