நன்றி கூறுகிறார் ஹாபிஸ் நஸிர் அஹமட் MP

நெஞ்சை விட்டு நீங்கா நிறைவான நன்றிகள்
எனது அன்பின் மட்டக்களப்பு வாழ் பொதுமக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் / வணக்கம்.
நடந்து முடிந்த 2020ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தலில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் இலக்கம்
இரண்டில் போட்டியிட்ட என்னை பெருமளவிலான விருப்பு வாக்குகளைத்
தந்து அமோக வெற்றியீட்டச் செய்தமைக்காக இதயபூர்வமான
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏறாவூர், கல்குடா, காத்தான்குடி பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான
முஸ்லிம் சகோதரர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப்
பிரதேசங்களிலும் பரவலாக வாழுகின்ற கிறிஸ்தவ, தமிழ்
சகோதரர்களும் தங்கள் அன்பின் அடையாளமாக விருப்பு வாக்கினைத்
தந்த எனது பெருவெற்றிக்குப் பங்களிப்பு செய்தமையானது நெஞ்சத்தில்
நீங்கா இடத்ததைப் பெற்றுள்ளது.

இவ்வெற்றியை உங்களது
வெற்றியாகவே கருதுகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதி என்ற வகையில்
அனைத்துப் பிரதேசங்களுக்கும் என்னாலான சேவைகள் தொடரும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து மக்களும் அபிவிருத்திப்
பயணத்தில் ஒன்றாகக் கைகோர்ப்போம்.

நன்றி
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்,

ஹாபிஸ் நஸிர் அஹமட்
பாராளுமன்ற உறுப்பினர் – MP மட்டக்களப்பு மாவட்டம்.
பிரதித் தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
முன்னாள் முதலமைச்சர் – கிழக்குமாகாணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s