மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் சுகாதாரத் துறையினர் கொவிட்19 தொற்று பரவலை நூறுவீதம் கட்டுப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.
இன்றைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையப் பெற்றுள்ளது என்று கேட்டபோது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
