ஒரே நாளில் 63 பேர் அடையாளம்; இது வரை ஆகக் கூடிய பதிவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (26) இரவு 11.58 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 505 இலிருந்து 523 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, நேற்றையதினம் (26) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 63 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியியுள்ளனர்.