கொழும்பு: இலங்கையில் இன்று (15.04.2020) இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் இதுவரை 235 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 163 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 144 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 63 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.