கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (13) இரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய நேற்று (13) இரவு 11.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 217 இலிருந்து 218 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய நேற்றையதினம் (13) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, எவரும் குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 218 பேரில் தற்போது 155 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 56 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 117 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.