மட்டக்களப்பு மாநகர நிர்வாக
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு
தளர்த்தப்படும் போது அறிவிப்புகளை மீறி
திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை
உடடியான மூடுமாறு மாநகர முதல்வர்
உத்தரவிட்டார். கொரோனா நோய்த் தொற்றின்
அபாயம் காரணமாக தேசிய ரீதியில்
பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது
நேற்று வியாழக்கிழமை (09.04.2020) காலை 6
மணி தொடக்கம் மாலை 4 மணி வரையுடன்
தளர்த்தப்பட்டிருந்தது.

இவ்வேளையில் மட்டக்களப்பு
மாநகரசபைக்குள் அத்தியாவசிய பொருட்கள்
விற்பனை நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட
வேண்டும் என்று மாநகரசபை மற்றும் மாவட்ட
கொரோனா ஒழிப்பு செயலணியினால்
அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தது.
இருந்தும் இவ்வறிவிப்புகளை மீறும் வகையில்
ஆடை, அழகுசாதனப் பொருட்கள்,
உணவகங்கள் உட்பட சில அத்தியாவசிய
பொருட்கள் அல்லாத விற்பனை நிலையங்கள்
திறக்கப்பட்டு சித்திரைப் புத்தாண்டுக்கான
விற்பனைகளை இடம்பெற்றன.
மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு
அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை
வழங்கிவரும் நிலையில் இவ்வாறு செயற்படும்
ஒருசில வர்த்தகர்களினால் கொரோனா ஒழிப்பு
நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்
எனக் குறிப்பிட்ட மாநகர முதல்வர்.
இக்காலத்தின் நிலையை உணர்ந்து மனித
உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக
பொதுமக்களும் சித்திரைப் புத்தாண்டினை
தத்தம் குடுப்பத்தினரோடு மாத்திரம் மிக
எளிமையான முறையில் கொண்டாடுமாறும்
மாநகர முதல்வர் கேட்டுக் கொண்டார்.