பதுளை: தாய், தந்தை மற்றும் அவர்களது ஏழு வயது மகன் ஆகிய மூவரும் மேற்படி சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களில் ஏழு வயது நிரம்பிய சிறுவனுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதும் பெற்றோர் அவரை பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இதையடுத்து அச்சிறுவனின் தாயும் தந்தையும் விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த மூவரும் தனித்தனியாக விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் இந்நிலையில் அவர்கள் மூவரும் தென்கொரியாவில் வசித்து வந்த இலங்கையர்களாவர். தென்கொரியாவில் கொரோனா நோய் பரவுவதை அடுத்து குறித்த மூவரும் அச்சம் கொண்டு தமது சொந்த நாடான இலங்கைக்குயின் பண்டாரவளைப்பகுதியில் அம்பிட்டிய என்ற கிராமத்திற்கு கடந்த 27 ஆம் திகதி வருகை தந்துள்ளனர்.
அவர்கள் வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் சிறுவனுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்தே இம்மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இம்மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றதா என்று அறியும்பொருட்டு விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதனைக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் ஏனைய நோயாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விசேட மருத்துவ அறையில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் பதுளை அரசினர் வைத்தியசாலையின் சுகாதார பணிப்பாளர் ரன்ஜித் அமரகோன் தெரிவித்தார்.