கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 198வது கொடியேற்ற நிறைவு விழா

– எம்.என் .எம்.அப்ராஸ்

கல்முனை: கல்முனை மாநகர மக்களால் வருடா வருடம் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழாவின் கொடி இறக்கும் நிறைவு தினம் கடற்கரை பள்ளிவாசலில் இன்று(06) பிற்பகல் இடம்பெற்றது. கொடியிறக்கும் தினமான (06)இன்று வியாழனன்று மாபெரும் கந்தூரி அன்னதானம் ,வழங்கிவைக்கப்பட்டதன் பின்னர் விஷேட துஆ பிராத்தனையுடன் கொடி இறக்கப்பட்டது .

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கடந்த ( 25/01/2020) சனிக்கிழமை கொடியேற்றம் ஆரம்பமானது இவ் கொடியேற்றமானது தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெற்றதுடன் . இதில் புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாக்களின் சன்மார்க்கச்
சொற்பொழிவு என்பன இடம்பெற்றமை குறிப்பிட்டத்தக்கது.

இதன் போது உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் ஏராளமான பொது மக்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s