கொழும்பு: ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (30) இடம்பெற்ற ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டாதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் நீடித்திருக்க வேண்டும் எனவும், செயற்குழுவில் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.