காத்தான்குடி முதலாம் குறிச்சி நூர்முகம்மட் லேனைச் சேர்ந்த செயினுலாப்தீன் முகம்மட் ஜெஸீல் (வயது 19) என்பவர் கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
கடந்த 21/04 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பத்தையடுத்து ஸஹ்றான் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களில் ஒருவராக மேற்படி இளைஞரும் கைது செய்யப்பட்டு கொழும்பில் குற்றப்புலனாயவுப் பிரிவினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி இளைஞர் உயிரிழந்ததாக இன்று (13.12.2019) வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி பொலிசார் குறித்த இளைஞனின் வீட்டுக்கு அறிவித்துள்ளனர்.
இவரது சகோதரரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜெஸீலின் மரணத்தில் சந்தேகங்கள் இருக்கலாம் என கொழும்பிலுள்ள மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். (AK-90)
Image: Facebook