அடுத்த ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி, அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அளகப்பெரும இன்று (28) முற்பகல் ஹோமகம, பிட்டிபன, மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.
