ஐக்­கிய தேசிய கட்­சியின் பல எம்.பி.க்களுடன் “விலைப்பேச்சுவார்த்தை”

நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அமோக வெற்­றி­பெற்­றுள்ள நிலையில் 113 ஐ பெறும் தரப்­பினர் பாரா­ளு­மன்­றத்தில் ஆட்சி அமைப்­ப­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர்.
அதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் 113 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பெற்­றுக்­கொள்ளும் முயற்­சியில் மஹிந்த தரப்பு ஈடு­பட்­டுள்­ளது. அதன்­படி நேற்­றைய தினமும் நேற்று முன்­தினம் மாலையும் ஐக்­கிய தேசிய கட்­சியின் பல எம்.பி.க்களுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கோத்­த­பாய ராஜ­பக்ஷ இன்­றைய தினம் நாட்டின்  7ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில்  அதனைத் தொடர்ந்து   எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ  பிர­த­ம­ராக  பதவிப் பிர­மானம் செய்­து­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்த நிலை­யி­லேயே   அடுத்த பாரா­ளு­மன்ற  அமர்­வின்­போதே மஹிந்த தரப்­பினர் புதிய அர­சாங்­கத்தின் பெரும்­பா­மையை வெளிக்­காட்ட முயற்­சிப்­பதன் விளை­வா­கவே இவ்­வாறு  113 என்ற   பெரும்­பான்­மையை  பெறு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர்.    இதே­வேளை நேற்­றைய தினம்  கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதைத் தொடர்ந்து  ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் பலர்   தமது  அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர்.  

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர, விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ,   மற்றும்  டிஜிட்டல்  உட்­கட்­ட­மைப்பு தொடர்­பான    அமைச்­ச­ரவை அந்­தஸ்து அற்ற  அமைச்சர்    அஜித் பி பெரே­ராவும் தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தா­கவும் அறி­வித்­தி­ருக்­கிறார்.  

இதே­வேளை  இது­தொ­டர்பில் கருத்து   வெளி­யிட்­டுள்ள  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்   தலைவர் மனோ கணேசன்   புதிய  ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­வுடன் பிர­த­மரும் பத­வி­யேற்­பதே சம்­பி­ர­தாயம். எனவே அமைச்சர் தற்­போது  பதவி வில­கு­வது  நகைச்­சுவை என்று  தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

அந்­த­வ­கையில் எதிர்­வரும் சில தினங்­களில் பாரிய கட்­சித்­தா­வல்கள் இடம்­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  தற்­போது   மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு  சுதந்­தி­ரக்­கட்­சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும்  பாராளுமன்ற  உறுப்பினர் குமார வெல்கம எவ்வாறான முடிவை எடுப்பார் என்பது தொடர்பில்  இதுவரை தெளிவற்றத்தன்மையே காணப்படுகின்றது. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s