தேர்தல் கட­மை­களில் 2 இலட்சம் அரச ஊழி­யர்கள்: 60ஆயிரம் பொலிஸார், 3500அதி­ரடிப் படையினர்

இலங்­கையின் ஏழா­வது ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான தேர்­தலின் வாக்குப் பதி­வுகள் நாளை இடம்­பெ­ற­வுள்ள நிலையில், இரண்டு இலட்சம் அரச ஊழி­யர்கள் தேர்தல் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­களில் இவர்கள் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவ்­வ­தி­காரி குறிப்­பிட்டார்.

தேர்­தல்கள் தொடர்­பி­லான பாது­காப்பு மற்றும் அது ­சார்ந்த பணி­களில் 60 ஆயி­ரத்து 175 பொலிஸார் ஈடு­ப­டுத்­த­ப்ப­ட­வுள்­ள­தா­கவும் அவர்கள் நேற்று, குறித்த  பகு­தி­க­ளுக்கு கட­மைக்­காக சென்­றுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

 60175  பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக 3500 பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் நேர­டி­யா­கவே பாது­காப்பு உள்­ளிட்ட கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன்,    எண்­ண­ாயி­ரத்து 80 சிவில் பாது­காப்பு  படை­யினர்  பாது­காப்பு பணி­களில்  ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

தேர்­தல்கள் ஆணைக்குழுவின்  தக­வல்­களின் பிர­காரம், வாக்­கெண்ணும் பணி­களில் மட்டும் சுமார் 48 ஆயிரம் அரச ஊழி­யர்கள் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். அத­னை­விட ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான அரச ஊழி­யர்கள் வாக்­க­ளிப்பு நிலைய பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக சுமார் 10 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் நலன்­புரி மற்றும் போக்­கு­வ­ரத்து கட­மை­களில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s