மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் நடுப்பகுதியில் வீதியை மறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இளைஞர்கள் பெண்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீதியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் இரவு 9 மணிவரை நீடித்த நிலையில் மட்டக்களப்பு கொழும்பு மற்றும் கல்முனை அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கான போக்குலரத்து முற்றகத் துண்டிக்கப்பட்டது இததனால் மட்டு கல்முனை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பொலிசார் கலகமடக்கும் பொலிசார் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்பாட்டகாரருடன் பொலிசார் பேச்சுநாத்தியபோது ஆர்பாட்டகாரர்கள் அரசாங்க அதிபர் வந்து புதைக்கப்பட்ட உடற்பாகங்களை தோண்டி எடுப்பதாக உத்தரவாதம் தரும் வரை வீதியை விட்டு விலகமாட்டோம் கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன்ர்.
இரவு 9.00 மணிக்கு பொலிசார் ஆர்பாட்டகாரர் மீது கண்ணீர்புகை குண்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்து தரத்தியடித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இத் தாக்குதலின் போது பலர் காயமடைந்ததுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.