மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொழும்பு: மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில்  இன்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினரை  கலைப்பதற்காக  பொலிசார்  கண்ணீர்புகை  பிரயோகமும் , நீர்தாரை  பிரயோகமும்  நடத்தினர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல்  ஸ்ரீஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது. 

 நுகேகொட ,கிருலப்பனை , தும்முல்ல சந்தியூடாக அலரி மாளிகைக்கு சென்றடைய  ஆர்ப்பாட்டகாரர்கள் முற்பட்டனர்.

மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்திற்கு  எதிராக  ஆயிரக்கணக்கான  பல்கலைக்கழக மாணவர்கள்  கோஷங்களை எழுப்பியும் , சிவப்பு  நிற  கொடிகளை  ஏந்தியவாறும்   தமது எதிர்ப்பை  வெளிப்படுத்தினர்.  ஆர்ப்பாட்டகாரர்கள் கொள்ளுப்பிட்டிய சந்தியை சென்றடைந்த போது அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு  ஆர்ப்பாட்டகாரர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s