தமிழ் இனத்திற்குப் போராட்டம் என்பது புதிதான விடயமல்ல என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிவைக்க விரும்புகின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுப்பதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி பிரதேச செயலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் இன்று உண்ணாவிதரத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பார்வையிடச் சென்று அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.