கொழும்பு: நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி ஒருவருடைய இடமாற்றம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளிட்டார் எனத் தெரிவித்தே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.