அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகமாகும். அதனால் அதனை முற்றாக ஒழிக்கும் பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது. அத்துடன் பிரிவேனா கல்வியைப்போன்று மத்ரஸா கல்வியையும் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவரவேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடிசில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.