
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக 1500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது விபரங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே தற்போது போதுமான இரத்தம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில் காணப்படுவதால் இரத்தம் வழங்குவதற்காக வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுக்கு இனம்,மதம்,மொழி,பிரதேசம்,தூரம் பாராது வருகைதந்த 1500க்கும் மேற்பட்ட பொது மக்கள் இரத்த தட்டுப்பாடு நிலவும் போது தொலைபேசி மூலம் அழைப்பதற்காக தங்களது விபரங்களை மட்டக்களப்பு இரத்த வங்கிக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.