கொழும்பு: அண்மையில் வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்திய சிங்கள மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் பலியானதுடன், பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Continue reading வெலிவேரிய சம்பவம்: பொது பல சேனா மீது பலிபோடும் தாக்குதல் திட்டதாரிகள்!
Daily Archives: 05/08/2013
கல்முனை பரீட்சை நிலையங்களில் கையடக்கத் தொலைபேசிகள்
கல்முனை: கல்முனை வலயத்திலுள்ள சில பரீட்சை நிலையங்களில் பணியாற்றும் உதவி மேற்பார்வையாளர், நிலைய ஊழியர் போன்றோரிடம் கையடக்கத் தொலைபேசிகள் இருந்ததாக பிரதேச இணைப்பாளர் எம். கே. எம். மன்சூர் பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு அவசர ‘ பெக்ஸ்’ மூலம் முறைப்பாடு செய்துள்ளார். Continue reading கல்முனை பரீட்சை நிலையங்களில் கையடக்கத் தொலைபேசிகள்
‘விடுதலைப் புலிகளை அல்லாஹ் அழித்தார் என ஹூனைஸ் பாரூக் கூறுவதை ஏற்க முடியாது’
கொழும்பு: விடுதலைப்புலிகளையும் தமிழர்களையும் அழித்து பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்களை அல்லாஹ்வா உருவாக்கினார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். Continue reading ‘விடுதலைப் புலிகளை அல்லாஹ் அழித்தார் என ஹூனைஸ் பாரூக் கூறுவதை ஏற்க முடியாது’
கிழக்கில் களைகட்டும் நோன்புப் பெருநாள் வியாபாரம்
காத்தான்குடி: எதிர்வரும் சில தினங்களில் முஸ்லிம்கள் கொண்டாடவுள்ள ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பெருநாள் வியாபாரங்கள் களை கட்டியுள்ளதாக வர்த்தக நிலைய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் முஸ்லிம் ஆண்கள், பெண்கள் என பலரும் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று ஆடைகளை கொள்வனவு செய்கின்றனர். Continue reading கிழக்கில் களைகட்டும் நோன்புப் பெருநாள் வியாபாரம்
குருநாகல், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஸ்ரீ.ல.கா தலைமைகள் சந்திப்பு
கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் குருநாகல், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (04) நண்பகல் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் Continue reading குருநாகல், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஸ்ரீ.ல.கா தலைமைகள் சந்திப்பு
காத்தான்குடியில் இருபத்தேழாம் இரவு…
காத்தான்குடி: நேற்றிரவு ரமழான் இருபத்தேழாம் இரவை முன்னிட்டு, காத்தான்குடி பஸார் நேரத்தோடு மூடப்பட்டதுடன் மக்கள் பள்ளிவாயலுக்குச் சென்று நல்லமல்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டதைக் காண முடிந்தது. ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், முகைதீன் மெத்தை ஜூம்ஆ பள்ளிவாயல், இரும்புத்தைக்கா மற்றும் ஸெயின் மௌலானா தைக்கா ஆகியவற்றின் நேற்றைய இரவின் காட்சியை ஊருக்கு வெளியிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது. Continue reading காத்தான்குடியில் இருபத்தேழாம் இரவு…
தென்கிழக்கில் இருபத்தேழாம் இரவு…
கல்முனை: இருபத்தேழாம் இரவை முன்னிட்டு நேற்றிரவு சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய ஊர்களில் பள்ளிவாயல்கள் அலங்கரிக்கப்பட்டு மக்கள் தொழுகைகளில் ஈடுபடுவதையும், மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதையும் காணலாம். Continue reading தென்கிழக்கில் இருபத்தேழாம் இரவு…