Month: May 2013
-
ஹூப்பு,சுன்னி,தௌஹீத் என்பதைக் களைந்தெறிந்து- ஒன்றிணைந்து போராடுவோம்
– முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான அமைப்பு கொழும்பு: அஸாத் சாலியின் கைதுக்குப் பின்னர் அவருக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருந்துவரும் அனுதாபங்களை, அவரது தனிப்பட்ட சமய விடயங்களை அரசியலாக்கி, இவரை மீண்டும் சிறைப்படுத்த ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
-
சவூதி அரேபியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி-நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சவூதி அரேபியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை (8) பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
-
கிண்ணியா பொது மையவாடியை அழுகுபடுத்தி சீரமைப்புக்கான ஒன்றுகூடல் கிண்ணியா நகரபிதா தலைமையில்
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா எம்.எம். ஹில்மியின் தலைமையில் கிண்ணியா பொது மையவாடி அழகுபடுத்தி சீரமைப்புக்கான கலந்துரையாடல் நேற்று மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
-
உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மே மாதம் 8 எட்டாம் திகதி கொண்டாடப்படும் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளில் சிரமாதனம், முதலுதவி, மரதன் ஓட்டம் போன்ற பல்வேறு நிகழவுகள் இடம்பெற்றன.
-
காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்களின் மூன்று நாள் கல்விச் சுற்றுலா
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்கள் கடந்த சனிக்கிழமை மூன்று நாள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.
-
நிவாரணங்களுடனான புதிய மின் கட்டணம் 20ம் திகதி முதல் அமுல்
கொழும்பு: மேதினக் கூட் டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித் ததற்கு அமைய புதிய மாற்றத்துட னான மின்கட்டண அறவீடு இம்மாதம் 20ஆம் திகதிமுதல் அமுலுக்கு வருமென பொதுப் பயன் பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஜயதிஸ்ஸ.டி. கொஸ்தா தெரிவித்துள்ளார்.
-
உணர்வுகளைத் தூண்டி நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயன்றதாலேயே அஸாத் சாலி கைது: பிரதமர்
கொழும்பு: அரசியல் கட்சிகளையோ தனிநபர்களையோ நசுக்குவதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது. மாறாக, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் செயற்படுவோருக்கு எதிராகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறதென பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறினார்.
-
லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா நடாத்தும் மகளிருக்கான இஸ்லாமிய கருத்தரங்கு
– பழுலுல்லாஹ் பர்ஹான் இடம்: ஹிஸ்புல்லாஹ் மண்டபம் காலம்: 10.05.2013 நேரம்: பி.ப 4.00 மணி
-
பாகிஸ்தானியர்களுக்கு அஜ்மீர் தர்ஹாவில் பிரார்த்தனை மறுப்பு!
-OIT ஜெய்ப்பூர்: அஜ்மீர் தர்காவில் இனிமேல் பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனைக்கு வரும்போது உதவுவதில்லை என்று மத குருக்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நோர்வேயின் அகதிகள் பேரவையின் நிறைவு தின நிகழ்வுகள் இன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: நோர்வேயின் அகதிகள் பேரவை இலங்கையில் தனது பணியினை நிறைவு செய்து நாடு திரும்ப உள்ளனர். இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திற்கான நோர்வேயின் அகதிகள் பேரவையின் கல்முனை அலுவலகத்தின் செயற்பாடு நேற்றுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
-
“பேச்சைத் தண்டிக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தேவையில்லை”
கொழும்பு: இலங்கையில் ஒரு முஸ்லிம் தலைவரான ஆசாத் சாலியின் கைது நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினார். துவேஷத்தைத் தூண்டும் வகையிலான பேச்சுகளை தண்டிப்பதற்கு குற்றவியல் சட்டங்களிலேயே இடம் இருக்கிறது என்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ரணில் கூறினார்.
-
கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்தும் சிராஸ் மீராசாஹிபே இருக்க வேண்டும்: ரண்முத்துகல சங்கரத்ன தேரர்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்தும் சிராஸ் மீராசாஹிபே இருக்க வேண்டும் என கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.