கரு வளர்ச்சி பற்றி இஸ்லாம்

ஆணின் விந்து பெண்ணில் செலுத்தப்பட்டு 24 மணத்தியாலங்களுக்குள் பலோபியன் குழாயினூடாக கருவறையை நோக்கி வந்து கொண்டிருக்கும். பெண்ணின் சினைமுட்டையுடன் சேர்ந்து கருக்கட்ட ஆரம்பிக்கின்றது.

பின்னர் விந்தினதும் சினைமுட்டையினதும் சேர்க்கையான அக்கலப்புத்துளி பலோப்பியன் குழாயினூடாக 6ம் நாளில் கருவறையை வந்தடையும். இதையே அல்குர்ஆன் “நுத்பதுன் அம்ஷாஜ்” எனக் குறிப்பிடுகிறது.

நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம். (76: 2)

விஞ்ஞானம் இக்கலப்புத் துளியை (Zygote) என்கிறது. குருவறையை நோக்கிவரும் வழியில் 4ம் நாளில் Zygote Blastolyst என்ற சூலாக விருத்தியடைய ஆரம்பித்து 6ம் நாள் கருவறையை வந்தடைகிறது. பின்பு அங்கு ஸ்திரமாக 10 நாட்கள் “நுத்பதுன் அம்ஷாஜ்” என்ற நிலையில் தங்கி இருக்கும்.

இந்த தங்கு நிலையையே அல்குர்ஆன் குறிப்பிட்டதொரு கால அளவு வரை அதனைப் பாதுகாப்பான இடத்தில் அமைத்தோம் (27: 21-22) பின்னர் ஒரு பாதுகாப்பான இடத்தில் கருவறையில் நாம் அவனை இந்தரியத்துளியாக்கினோம் (23: 13) என்கிறது.

6ம் நாளில் இருந்து 15ம் நாள்வரை 10 நாட்கள் நுத்பதுன் அம்ஷாஜ் என்ற நிலையிலேயே இருக்கும். 15-23 அல் லது 24 நாட்கள் வரை 8 அல்லது 9 நாட்கள் கரு அலகா (Placenta) என்ற நிலையில் வளர்ச்சியடையும் 23-24 நாட்களுடன் அலகா என்ற நிலை முற்றுப் பெறுகின்றது.

அதிலிருந்த 2 நாட்களில் 24-26 வரை அலகா அவசரமானதொரு மாற்றத்துக்குள்ளாகி முழ்கா என்ற கட்டத்தை அடைகிறது. என்பு வளர்ச்சி (இழாம்) பின்னர் அம்மாமிசத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம் (23:14) ஒரு மனிதனின் என்பு வளர்ச்சி 20-25 வயது வரை நீடித்துச்

ஆரம்ப நிலைக்கான எலும்பு வளர்ச்சிகளே நடைபெறுகின்றன. அவற்றைச் சூழ 15 நாட்களில் தசைகள் உருவாகின்றன. ‘பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். முளையமானது ஸ¥றா அல்முஃமினூனில் 14ம் வசனத்தில் கூறப்படுவது போன்று புதிய வித்தியாசமான அமைப்புக்கு மாற்றப்படுகின்றது.

பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். (23:14)

எளிய அமைப்பிலான முக உறுப்புகள் அவ்விடங்களை விட்டும் பொருத்தமாக, சரியான இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. காதுகள் கழுத்துப் பகுதியில் இருந்து சரியான இடத்திற்கும், கண்கள் இருபக்க ஓரங்களில் இருந்து முன்னோக்கியும் மூக்கு, வாய் என்பன அவற்றிற்குரிய இடத்திற்கு நகர்த்தப்பட்டு அண்ணளவான மனித முகத் தோற்றத்தைப் பெறுகின்றன.

(அன்ஷஃனா), முளையம் ஏற்கனவே அநையும் நிலையில் இருந்தாலும் ரூஹ் ஊதப்பட்ட பிறகுதான் சுயமாக அசைவும், செவியுறவும், பார்க்கவும், பேசவும் சிரிக்கவும் அழவுமான ஆற்றல்களைப் பெறுகின்றது. 6+10+9+2+15=42 நாட்கள் நுணுக்கக் காட்டியோ வேறு சாதனங்களோ கண்டு பிடிக்கப்பட்டிராத அக்காலத்தில் 42 நாள் என்ற விடயம் நபியவர்களால் துல்லியமாகக் கூறப்பட்டுள்ளது.

“முளையத்தில் 42 இரவுகள் கடந்ததன் பின்னர் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் இதனை வடிவமைக்கிறார் மேலும் காதுகள், கண்கள், தோல், தசைகள் எலும்புகள் ஆகியவற்றையும் உருவமைக்கிறார். பின்பு என் இரட்சகனே இது ஆணா, அல்லது பெண்ணா என்று வினவுகிறார். பின்பு என் இரட்சகன்தான் வரும்பியதைத் தீர்மானிக்கின்றான். வானவர் அதனைப் பதிவு செய்கிறார். (முஸ்லிம்)

இவை அமெரிக்க முளையவில் ஆய்வாளர்க ளான Porf E.Marshall Johnson T.V.N. , Persard ஆகியோரால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

-தினகரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s