Day: June 10, 2013
-
ரிதிதென்ன பல்கலைக்கழக கல்லூரி காத்தான்குடியில் ஒப்பந்தம் கைச்சாத்து
*12 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு *பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கையொப்பம் காத்தான்குடி: மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னவில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கு முதலிடவிருக்கும் சவூதிய அரேபியாவின் முன்னணி முதலீட்டாளர் அஷ்- ஷெய்க் யஹ்யா அப்துல் அஸீஸ் அல் ராஷித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
-
மு. கா. ஆட்சியின் கீழான கல்முனையில் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கே அச்சுறுத்தல் எனும் போது ஏனைய கட்சிக்காரார்களின் நிலை எவ்வாறிருக்கும்?
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ. எம். பறகத்துள்ளாவின் வீட்டின் மீதான குண்டுத்தாக்குதலை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
-
காத்தான்குடி நகர சபையின் அவசர சபை அமர்வு இன்று
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் அவசர சபை அமர்வு 10-06-2013 இன்று திங்கட்கிழமை பி.பகல் 3.மணிக்கு காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
-
பிரிட்டிஷ் குடியேற்றக் கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை
லண்டன்: பிரிட்டிஷ் பிரஜைகள் தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்துவந்து குடியிருப்பதில் உள்ள குறைந்தபட்ச வருமானம் ரீதியான கட்டுப்பாடுகளை மீள் பரிசீலனை செய்யுமாறு குடிவரவு தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவொன்று கேட்டுக்கொண்டுள்ளது.
-
புயல்-மழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
கொழும்பு: கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென வீசிய புயலுடன் கூடிய மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. காணாமல்போன 30 மீனவர்கள் தேடப்பட்டுவருகின்றனர்.
-
காத்தான்குடி நகரசபையின் சபை அமர்வில் கலந்து கொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த சில மாதங்களாக காத்தான்குடி நகர சபையில் இடம்பெறும் சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாமல் இருந்து வந்தனர்.
-
அமரா கல்லூரி, பிரைட் டியூசன் நிலையங்களுக்கு இடைக்காலத் தடை!
மட்டக்களப்பு: செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரபலமான டியூசன் நிலையங்களுக்கு பிரதேச சிறுவர் பாதுகாப்பு பிரிவினரினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை தேசிய கீத விவகாரம்: தவருக்கு வருத்தம் தெரிவித்தது ஐ.சி.சி
லண்டன்: ஐ.சி.சி. சம்பியன்ஸ் லீக் கிரிக்கட் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தவறுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.
-
அடுத்த ஆண்டில் நிறுவப்படும்13 பல்கலைக்கழக கல்லூரிகள் விபரம்: மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி எங்கே?
– AF-47 கொழும்பு: இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழக்பெரும 13 பல்கலைக்கழக கல்லுரிகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பல்கலைக்கழக கல்லூரிகளின் நிர்மாண பணிகளுக்காக 3,173 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
-
கிண்ணியா நகரசபையின் தேசிய சுற்றாடல் வாரத்தில் ரஹ்மானியா மையவாடி சிரமதானம்
– ரைஸ் கிண்ணியா: 2013 ஆம் ஆண்டின் தேசிய சுற்றாடல் வார செயற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் கிண்ணியா நகரசபையிலும் இவ்வாரத்திற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்செயற்பாடுகளில் சிரமதானம், மரநடுகை, கழிவகற்றல், விழிப்புணர்வூட்டல் போன்ற விடயங்கள் செயற்படுத்தப்பட்டுவரும் நிலையில் இன்று 10.06.2013 ரஹ்மானியா மையவாடி சிரமதானம் இடம்பெற்றது.
-
உம்ரா விஸாவுக்கான கால எல்லை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்: 14 தினங்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி!
கொழும்பு: உம்ரா விசா காலாவதியாகும் காலம் 14 தினங்களுக்கு மட்டுப்படுத்த சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளது. புனித மக்கா ஹரம் பள்ளிவாசலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலேயே இந்த கட்டு ப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு: மேலும் 29 பேரை காணவில்லை! 37 படகுகளும் மாயம்!!
கொழும்பு: சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடும் காற்றினால் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தினால் 37 மீன்பிடி படகுகளும் 32 மீனவர்களும் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன தெரிவித்தார். திடீரென வீசிய கடுமையான காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 35 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன், 14 படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.