Month: May 2013
-
விரக்தியால் ஓய்வுபெறும் இலங்கை ரக்பி நடுவர்கள்!
கொழும்பு: இலங்கையில் ரக்பி போட்டி நடுவர்கள் பலரும் தொழில்களிலிருந்து ஓய்வுபெற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கம் கூ றுகிறது. இதனால் அடுத்துவரும் கழக மட்ட போட்டிகளின்போது பணியாற்றுவதற்கு கூட நடுவர்கள் இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கத்தின் தலைவர் ஓவில் பெர்ணான்டோ கூறினார்.
-
பொலிஸ் வாகனத்தில் புறக்கணிக்கப்பட்ட ‘காத்தான்குடி’
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை பொலிஸ் திணைக்களத்தினாள் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் புதிதாக ஒவ்வொரு பொலிஸ் ஜீப் வண்டி வீதம் வழங்கப்பட்டுள்ளது.
-
தரமற்ற வீதிகளை நிர்மாணித்துள்ள ஒப்பந்தக்காரர்களின் கொடுப்பனவுகளை நிறுத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் நடவடிக்கை
– பழுலுல்லாஹ் பர்ஹான் மூதூர்: தரமற்ற வீதிகளை நிர்மாணித்துள்ள ஒப்பந்தக்காரர்களின் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் கொங்ரீட் வீதிகளின் தரத்தை பரிசீலிப்பதற்கு குழுவொன்றை நியமித்துள்ளேன்.
-
‘நான் உங்களுக்கு சாப்பாடு வாங்கித் தருகின்றேன் உங்கள் பிரச்சினையை முடித்து விட்டு செல்லுங்கள்’ : காத்தான்குடி நகர சபைத் தவிசாளர்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தக்கோரி காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் (சுயேட்சைக்குழு-01) பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் ‘ஒரு மணி நேர கவன ஈர்ப்புப் போராட்டம்’ வியாழக்கிழமை காலை8மணி முதல் 9 மணிவரை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
-
அரசியல்வாதிகளின் முகவர்களாக பொலிசார் செயற்படுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும் – நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
– ஊடக அறிக்கை: காத்தான்குடி: முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் சமகால நிலைமைகள் தொடர்பாகவும் காத்தான்குடிப் பிரதேச அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு தெளிவுகளை வழங்கும் பொருட்டு இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எமது பொதுக்கூட்டம் காத்தான்குடிப் பொலிசாரின் இறுதிநேர அனுமதி மறுப்பு காரணமாக இரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
-
சமூக விரோதச் செயல்களுக்கு களமாக அமைந்துவரும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு அரங்கு!
– விசேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடியின் மத்திய பகுதியில் சுமார் 30 வருட வரலாற்றைக் கொண்டமைந்த, பொது மைதானமாகவும், பரீட் அரங்காகவும் திகழ்ந்த இம்மைதானம், 1998ம் ஆண்டுகளின் பின்னர் ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானமாக அழைக்கப்பட்டு வருகின்றது.
-
தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்தடைந்தார்!
கொழும்பு: தாய்லாந்து பிரதமர் இன்க்லக் சித்தவாத்ர (Yingluck Shinawatra) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இன்று சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அன்னாரை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரவேற்றார். அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா சுசில் பிரேம ஜயந்த ஆகியோரும் விமான நிலையம் சென்றிருந்தனர்.
-
இன்று இடம்பெறவிருந்த PMGG யின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க பொலிசார் மறுப்பு
– ஊடகப் பிரிவு: காத்தான்குடி: PMGG இன்று மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் நடாத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு இறுதி நேரத்தில் காத்தான்குடி பொலிசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
சீரற்ற காலநிலை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும்?
கொழும்பு: தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
போதையின் தீது கேளீர்
(இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்) (̅_̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅_̅()ڪے~ ~ – மதியன்பன் கஞ்சாவை, அபினை உதடு காதலித் திடுதல் தீதே… நெஞ்சாற இதை யறிந்தும் நித்தமும் அதனுள் வீழ்ந்து
-
ஆசிய தடகள போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்
– OIT சென்னை: ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் தமிழகத்தை உலுக்கியது.
-
தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்ந்து குழந்தைகளுக்கு பாலூட்டுவது அவசியம்
இலங்கையில் இடம்பெறும் பொருளாதார வளர்ச்சியுடன் உணவு உற்பத்தியிலும் குறிப்பாக நெல் உற்பத்தியிலும் நாடு தன்னிறைவை அடைந்திருப்பதனால் எமது நாட்டில் அனைவருக்கும் மூன்று வேளை உணவு திருப்திகரமான முறையில் கிடைக்கின்றது.